News April 8, 2025
அங்கன்வாடி பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

தென்காசி மாவட்ட திட்ட அலுவலரின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன் உதவியாளர் பணிகளுக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட இருக்கிறது. இந்த பணிகளுக்கு www.icds.tn.gov.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.
Similar News
News November 9, 2025
தென்காசியில் 10 பைக்குகள் எரிந்து நாசம்

சங்கரன்கோவில் சேர்ந்த முருகேசன் இவர் இலவன்குளம் சாலையில் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம் போல் வேலையை முடித்துக் கொண்டு, கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்நிலையில் இன்று அதிகாலை 2- மணி அளவில் திடீரென கடையின் தீப்பற்றி 10-க்கு மேற்பட்ட வாகனம் எரிந்துள்ளது. இது குறித்து சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News November 9, 2025
தென்காசி: நாளை காய்கறி சந்தை விடுமுறை

தென்காசி மாவட்டத்தில் இயங்கி வரும் பெரிய சந்தைகளில் ஒன்று புளியங்குடி காய்கறிச் சந்தை. ஒவ்வொரு மாதமும் தமிழ் மாத கடைசி திங்கட்கிழமை மாதாந்திர விடுமுறை விடப்படும். அந்த வகையில் நாளை (நவ.10) திங்கள்கிழமை மாதாந்திர விடுமுறை அறிவிக்கபட்டுள்ளதால் நாளை புளியங்குடியில் காய்கறி சந்தை இயங்காது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News November 9, 2025
ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் சுகாதார கேடு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேருந்து நிலையத்திற்கு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்திற்கு உள்ள நீண்ட நாள்களாக கழிவு நீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கழிவு நீரை அகற்ற பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


