News April 8, 2025

கடலூர்: மதுபான கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

image

மகாவீர் ஜெயந்தி தினமான ஏப்.,10ஆம் தேதி அன்று கடலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக் கூடங்கள் மற்றும் மனமகிழ் மன்றங்களை மூட வேண்டும். இதை மீறி திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மீது கடுமையான குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News November 1, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தடையின்றி உரங்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றைய நிலவரப்படி மாவட்டத்தில் யூரியா 3,324 டன்னும், டி.ஏ.பி 1,373 டன்னும், பொட்டாஷ் 1,463 டன்னும், காம்ப்லக்ஸ் உரம் 6,262 டன்னும், சூப்பர் பாஸ்பேட் 1,358 டன்னும் என மொத்தம் 13,002 டன் உரம் இருப்பு உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News November 1, 2025

கடலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா ?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News November 1, 2025

கடலூர் அருகே ரயில்வே கேட் மூடல்

image

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் ஆலை ரோடு 147-வது எண் கொண்ட ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.1) காலை 9மணி முதல் மாலை 5 மணி வரையிலும், அதுபோல நவ.02-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மாற்று பாதைகளை பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்ட்டுள்ளனர்.

error: Content is protected !!