News April 8, 2025
மிரட்டல் கடிதம்.. அவசரமாக தரையிறங்கிய விமானம்..

255 பயணிகளுடன் ஜெய்பூரில் இருந்து மும்பை சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் கழிவறையில் இருந்து வெடி குண்டு மிரட்டல் கடிதம் கிடைத்துள்ளது. பயணிகள் பத்திரமாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News April 17, 2025
சஞ்சு மட்டும் களத்தில் இருந்திருந்தால்..

DC அணிக்கு எதிரான போட்டியில் RR தோல்வியடைந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த சஞ்சு சாம்சன், பாதியிலேயே, மைதானத்தில் இருந்து வெளியே போனதுதான். 31 ரன்கள் எடுத்திருந்தபோது retd hurt முறையில் வெளியேறாமல் இருந்திருந்தால், ரன் குவிப்பில் ஈடுபட்டிருப்பார். இதனால், சூப்பர் ஓவர் வந்திருக்க வாய்ப்பில்லை; ராஜஸ்தானும் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருந்திருக்கும்.
News April 17, 2025
திமுகவை வீட்டுக்கு அனுப்ப பொன்முடி போதும்: ராமலிங்கம்

பொன்முடியின் பேச்சால், அவரின் மீது பெண்கள் கோபத்தோடு இருக்கின்றனர்; திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படுவதற்கு அவர் மாதிரியான ஆட்களே போதும் என்று பாஜக துணைத் தலைவர் ராமலிங்கம் விமர்சித்துள்ளார். மேலும், பொன்முடிக்கு சேரும் பெருமையெல்லாம், முதல்வர் ஸ்டாலினையும் சேரும் என சாடிய அவர், இதுபோன்ற விவகாரங்களை திசை திருப்பவே திமுக, அதிமுக – பாஜக கூட்டணியை விமர்சிப்பதாகவும் கூறியுள்ளார்.
News April 17, 2025
இறை பக்திக்கு புது விளக்கம் கொடுத்த சேகர் பாபு

இறை பக்தி என்பது வாழைப் பழம் போன்றது. வாழைப் பழத்தில் இருக்கும் தோல் சனாதனம். அதற்குள் இருக்கும் பழம்தான் இறைவன் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார். இதற்கு அதிமுகவின் கே.பி.முனுசாமி, அமைச்சர் சொல்லும் உவமை முழுமையாக தவறு. சனாதனத்திற்கும், இறைவனுக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. இறைவனும், சனாதனமும் ஒன்று என்றால், இவ்வளவு பெரிய விவாதமும் நீதிமன்ற வழக்குகளும் தேவையில்லை என்று பதிலடி கொடுத்தார்.