News April 8, 2025

ஜெயிலுக்கு போகவும் தயார்: பா.ரஞ்சித்

image

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள ‘சந்தோஷ்’ மற்றும் ‘நசீர்’ படங்களை பொதுவெளியில் திரையிட்டு சிறைக்கு செல்லவும் தயாராக இருப்பதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். சாதி, மத பாகுபாட்டை உரக்க சொல்லும் இப்படங்களை திரையிடுவது பெரிய குற்றம் ஒன்றும் இல்லை எனவும், ஏற்கனவே திரையிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், லைசன்ஸை கேன்சல் செய்துவிடுவதாக பிரசாத் லேப் அச்சுறுத்தபட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Similar News

News April 8, 2025

மோடி சொன்னால் கிணற்றில் குதிப்பேன்: அண்ணாமலை

image

மோடிக்காகத்தான் அரசியலுக்கு வந்தேன்; அவர் கிணற்றில் குதி என்று சொன்னால், கண்ணை மூடிக்கொண்டு குதிப்பேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். பதவிகள் வரும், போகும். அதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை; மாநிலத் தலைவர் பதவி இருக்காது என்பதால், தொண்டனோடு தொண்டனாக இருந்து போராட்டத்தை நடத்துவேன் என்றும் திமுகவின் ஊழலை தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

News April 8, 2025

TN பல்கலை.களுக்கு இனி கவர்னர் வேந்தர் இல்லை

image

TN பல்கலைக்கழக வேந்தர் பொறுப்புகளில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி விடுவிக்கப்பட்டுள்ளதாக திமுக MP வில்சன் தெரிவித்துள்ளார். கவர்னருக்கு பதில் பல்கலை.களுக்கு TN CM–ஐ வேந்தராக்கும் மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை குறிப்பிட்டு பேசிய அவர், இனி கவர்னர் வேந்தர் இல்லை என கூறியுள்ளார். TN பல்கலை.களுக்கு இனி அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் எனவும் தெரிவித்தார்.

News April 8, 2025

தங்கையை காதலித்ததால் ஆத்திரம்.. இளைஞர் கொலை!

image

நெல்லை டவுன் பகுதியில் நள்ளிரவில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இளைஞர் ஆறுமுகம் என்பவரை வெட்டிக் கொன்று, உடலை புதைத்துவிட்டு தப்பியோடிய சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது தங்கையை காதலித்ததால், ஒரு வருடம் பிளான் செய்து ஆறுமுகத்தை கொலை செய்ததாக கைதானவர்களில் ஒருவரான விஷால் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!