News April 8, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு

ஜோலார்பேட்டை- திருப்பத்தூர் ரயில் நிலையங்களுக்குட்பட்ட ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு காரணமாக, ஜோலார்பேட்டை- ஈரோடு ரயில் (56107) ஏப்ரல் 08, 15 ஆகிய நாட்களில் மதியம் 02.45 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் 55 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 03.40 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும்.
Similar News
News October 28, 2025
பருவமழைக்கு மாநகராட்சியில் 60 கண்காணிப்பு குழுக்கள்!

தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் சேலம் மாநகராட்சி பகுதிகளில் மழை பாதிப்புகளை கண்காணிக்கவும், பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவிடும் வகையில் ஒவ்வொரு வார்டிலும் 10 பேர் கொண்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பணிகளையும் கண்காணிக்க 60 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
News October 28, 2025
சேலம்: மாமன்ற இயல்பு கூட்டம் – ஆணையாளர் அறிவிப்பு!

சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; வருகின்ற அக்.31ம் தேதி வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு சேலம் மாநகராட்சியின் மாதாந்திர இயல்பு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது கோட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உள்ள குறைபாடுகள் குறித்து எடுத்துரைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
News October 28, 2025
சேலம்: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் மாதம் தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். நடப்பு மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அக்.31ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி வலியுறுத்தியுள்ளார்.


