News April 8, 2025
PM இன்டர்ன்சிப்: யார்-யார் விண்ணப்பிக்கலாம்?

PM இன்டர்ன்சிப் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.5,000, ஒருமுறை ரூ.6,000 மத்திய அரசு அளிக்கிறது. இத்திட்டத்திற்கு ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு யார்-யார் விண்ணப்பிக்கலாம் என பார்க்கலாம். இந்தத் திட்டத்திற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பாக 21- 24 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. IIT, IMM-ல் படித்தோர், CA, CMA படித்தோர் விண்ணப்பிக்க முடியாது.
Similar News
News September 14, 2025
உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள்..!

அவசர அவசரமாக உணவை சாப்பிடக் கூடாது, அப்படி செய்தால் செரிமான பிரச்னை ஏற்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர். சாப்பாட்டிற்கு குறைந்த நேரமே செலவிட்டால், உங்களது உடல் எடை அதிகரிக்கலாம் என எச்சரிக்கின்றனர். நன்றாக மெல்லாமல் வேகமாக சாப்பிடுவது, நீங்கள் அதிகமாக சாப்பிட்டது போன்ற உணர்வை கொடுக்குமாம். உண்பதற்கு அரை மணி நேரம் வரை எடுத்துக் கொண்டால் அனைத்து சத்துகளும் உடலுக்கு கிடைக்குமாம். SHARE IT.
News September 14, 2025
ITR தாக்கல் செய்ய நாளை கடைசி

2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு ITR தாக்கல் செய்ய நாளையுடன் அவகாசம் முடிகிறது. வழக்கமாக ஜூலை 31-ம் தேதியுடன் கணக்கு தாக்கல் நிறைவடையும் நிலையில் இம்முறை அவகாசம் செப்.15 வரை நீட்டிக்கப்பட்டது. நாளைக்குள் கணக்கு தாக்கல் செய்ய தவறினால் அபராதம் செலுத்த நேரிடும். இந்நிலையில், இம்முறை 6 கோடிக்கும் அதிகமானோர் கணக்கு தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
News September 14, 2025
நல்லகண்ணு விரைவில் டிஸ்சார்ஜ்: மருத்துவ குழு

CPI மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ராஜீவ் காந்தி ஹாஸ்பிடல் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 22-ம் தேதி வீட்டில் தடுமாறி விழுந்து தலையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் அவரை 24 மணிநேரமும் டாக்டர்கள் குழு கண்காணித்து வருவதாகவும், தற்போது இயற்கையான முறையில் சுவாசித்து வரும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் கூறியுள்ளனர்.