News April 7, 2025

திருப்பூரில் ஆதார் கார்டை ஒப்படைக்க வந்த மக்கள்

image

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி பகுதி குறவர் காலணியில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ள சூழ்நிலையில் அதனை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காததால் தங்கள் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

Similar News

News August 20, 2025

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஆக.21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஒடக்காடு, பங்களா ஸ்டாப், குமரன் வீதி, மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர், முருகம்பாளையம், கல்லம்பாளையம், சாமிநாதபுரம், ஜீவா காலனி, அங்கேரிபாளையம் ரோடு, கஞ்சம்பாளையம், சின்ன பொம்மநாயக்கன்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News August 20, 2025

திருப்பூர்: திருமணத் தடையா? இங்க போங்க!

image

திருப்பூர் மாவட்டம் கடத்தூரில் உள்ளது, புகழ்பெற்ற அர்ச்சுனேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்திற்கு ஆயிரம் ஆண்டு கால வரலாறு உள்ளதாம். அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் வழிபட்டால், திருமணத் தடை நீங்கும் எனப் புராணம் சொல்கிறது. ஆம், குலோத்துங்க சோழன் மகளின் மாங்கல்ய தோஷத்தை தீர்த்து வைத்த தலம் இது என நம்பப்படுகிறது. திருமணத் தடை உள்ள உங்கள் நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News August 20, 2025

திருப்பூரில் நாளை மின் ரத்து

image

திருப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை(ஆக.21) நடைபெறுவதால் அவினாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஒடக்காடு, பங்களா ஸ்டாப், காவிரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துச்சாமி வீதி, கே.ஆர்.இ. லே-அவுட், எஸ்.ஆர். நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!