News April 7, 2025

Way2News செய்தி எதிரொலி: திறக்கப்பட்ட கழிப்பறை

image

கடந்த மாதம் Way2News செய்தியில் சீர்காழி திருமுல்லைவாசல் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளதாக செய்தியானது வெளியிடப்பட்டது. இதனை அடுத்து தற்போது அந்த கழிப்பறை திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியினர் மகிழ்ச்சியோடு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 8, 2025

மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

image

வேப்பங்குளம் பெரியதெருவை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவருக்கும் இவரது மனைவி கோடீஸ்வரிக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் கோடீஸ்வரியை தாக்கி சுவற்றில் மோதியதில் பலத்த காயமடைந்து அவர் உயிரிழந்தார். 2019 ஆம் ஆண்டு முதல் இசம்வம் குறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளி ராஜபாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5000 அபராதமும் விதித்து அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

News April 8, 2025

இளைஞரின் நற்செயலை பாராட்டிய எஸ்.பி

image

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில் கடைவீதியில் சாலை ஓரத்தில் கிடந்த ரூ.10,000 பணத்தை அவ்வழியாக சென்ற ஹேமந்த் குமார் என்பவர் எடுத்து வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூரியமூர்த்தியிடம் ஒப்படைத்தார். ஹேமந்த் குமாரின் நற்செயலை பொதுமக்கள் பாராட்டிய நிலையில் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று ஹேமந்த்குமாரை நேரில் அழைத்து பாராட்டினார்.

News April 7, 2025

தபால் நிலையங்களில் ஆதார் முகாம்

image

மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் ப்ராஜெக்ட் ஆரோ திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்ட மயிலாடுதுறை ஆர் எஸ், நீடூர், பேரளம் ஆகிய தபால் நிலையங்களில் ஒரு மாத காலம் ஆதார் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

error: Content is protected !!