News April 7, 2025

ஸ்ரீரங்கம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் முகாம் நாளைய தினம் (08.04.25) திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 18, 2025

திருச்சி: கால்நடை வளர்ப்பு பயிற்சிக்கு அழைப்பு

image

திருச்சி கொட்டப்பட்டில் செயல்பட்டுவரும் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சிமையத்தில், ஆடுவளர்ப்பு பயிற்சி 22.09.2025 அன்றும், நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி 25.09.2025 அன்றும், கறவைமாடு வளர்ப்பு பயிற்சி 26.09.2025 அன்றும் நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மக்கள் ரூ.590/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது

News September 18, 2025

திருச்சியில் இன்று முகாம் நடைபெறும் இடங்கள்!

image

நமது திருச்சியில் இன்று 18.09.2025 உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெறும் இடங்கள்
1.கூத்தப்பர்
BHEL குடியிருப்பு வளாகம், கைலாசபுரம்
2.கல்லக்குடி
டால்மியா மக்கள் மன்ற திருமண மண்டபம், கல்லக்குடி
3.மணிகண்டம்
சமுதாயக்கூடம், அதவத்தூர்
4.வையம்பட்டி
மாரியம்மன் கோவில் அருகில், நடுப்பட்டி
5.தா.பேட்டை
அரசு மேல்நிலைப்பள்ளி, பைத்தம்பாறை
6.உப்பிலியபுரம்
RKN திருமண மண்டபம், எரக்குடி
SHARE பண்ணுங்க!

News September 18, 2025

திருச்சி: கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

image

திருச்சி மாவட்டம், பெருவளப்பூர் அருகே உள்ள கண்ணாக்குடியை சேர்ந்த மாதவன் (26), நேற்று தனது வயல்வெளியில் விழுந்து கிடந்த மரக்கிளைகளை அகற்றிவிட்டு அருகில் இருந்த கிணற்றில் கை, கால் கழுவுவதற்காக இறங்கியுள்ளார்.‌ அப்போது நிதைத்தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்த அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!