News April 7, 2025

துபாயில் மே 4ஆம் தேதி பிரமாண்ட திருக்குறள் விழா

image

துபாயில் வரும் மே மாதம் 4ஆம் தேதி பிரமாண்ட திருக்குறள் விழா நடைபெறவுள்ளது. விழாவுக்கு புதுச்சேரி CM ரெங்கசாமி தலைமை வகிக்க, மலேசிய எம்பி டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன், நடிகர் விவேக் ஓபராய், பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத், ஞான சம்பந்தன், சுமதி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இதையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதில் பங்கேற்க முன்பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News January 24, 2026

வெறும் ₹1000-ல் குழந்தையின் Future-ஐ பாதுகாக்கும் திட்டம்!

image

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை காக்க மாதம் ₹1000-ஐ NPS வாத்சல்யா திட்டத்தில் முதலீடு செய்யலாம். 18 ஆண்டுகள் முதலீடு செய்யும் பட்சத்தில், வட்டி எல்லாம் சேர்த்து மொத்த தொகை ₹8,48,000-ஆக இருக்கும். உங்கள் குழந்தைக்கு 18 வயதான பிறகு 80% தொகையை எடுத்து அவர்களின் படிப்பு செலவுக்கு பயன்படுத்தலாம். eNPS portal-க்கு சென்று திட்டத்தில் சேருங்கள். எல்லாருக்கும் பயன்படும், SHARE THIS.

News January 24, 2026

BREAKING: இந்தியா பவுலிங்

image

ஜிம்பாப்வேயில் நடக்கும் U-19 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான குரூப் ஸ்டேஜ் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஏற்கெனவே, அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், வங்கதேசத்தை 18 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி இந்தியா சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியிருந்தது. இந்நிலையில், நியூசிலாந்தையும் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெறும் முனைப்பில் இந்தியா உள்ளது.

News January 24, 2026

BIG NEWS: ஓபிஎஸ் உடன் திமுக அமைச்சர்.. புதிய பரபரப்பு

image

பேரவை முடிந்த கையோடு, சபாநாயகர் அறையில் OPS-ஐ அமைச்சர் <<18942850>>சேகர் பாபு<<>> சந்தித்து 15 நிமிடங்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான், அரசியல் ஏதும் பேசவில்லை என சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார். OPS-ன் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக மாற்றுக் கட்சிகளில் இணைவதால் அவர் என்ன முடிவெடுக்க போகிறார் என அரசியல் களத்தில் கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!