News April 7, 2025
முதல் இந்தியர்… மணல் ஓவியக் கலைஞருக்கு கௌரவம்!

முக்கிய தலைவர்களின் பிறந்தநாளிலோ, விழாக் காலங்களிலோ ஒடிசா கடற்கரையில் தனது மணல் சிற்பம் மூலம் கவனத்தை ஈர்ப்பவர் சுதர்சன் பட்நாயக். இங்கிலாந்தில் நடைபெற்ற மணல் கலை விழாவில் பங்கேற்ற அவர், பிரெட் டாரிங்டன் மணல் மாஸ்டர் விருதை வென்றுள்ளார். இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் சுதர்சன் பட்நாயக்தான். ஒடிசாவைச் சேர்ந்த அவருக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 4, 2025
இப்படி பண்ணா உங்க போனும் வெடிக்கலாம்.. உஷாரா இருங்க!

ரோட்டில், ஆபீஸில் என பல நேரங்களில், திடீரென போன்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு பல காரணிகள் இருந்தாலும், முக்கிய காரணமாக, போனைக் கூடுதல் நேரம் சார்ஜில் போட்டு வைப்பதுதான் என்று கூறப்படுகிறது. அதிக நேரம் சார்ஜாகும் போது, பேட்டரி அதிகமாக சூடாகி விடுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் போன் வெடிக்கும் அபாயம் உண்டு. எனவே, போன் சார்ஜில் இருந்தாலும், கவனத்துடன் இருங்கள். SHARE IT
News November 4, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 குறைந்தது

தங்கம் விலை 22 கேரட் கிராமுக்கு ₹100, சவரனுக்கு ₹800 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,250-க்கும், சவரன் ₹90,000-க்கும் விற்பனையாகிறது. நவம்பர் மாதம் தொடங்கியது முதலே ஏறுமுகத்தில் இருந்த தங்கம்<<18192239>> சர்வதேச சந்தையில்<<>> ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக மீண்டும் மளமளவென சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 4, 2025
தனித்தொகுதியில் தனி கவனம் செலுத்தும் திமுக!

தனித் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு இதர சாதியினர் ஓட்டுப்போடுவதில்லை என்ற பேச்சு உள்ளது. அதனால்தான், கடந்த தேர்தல்களில் கூட்டணி வலுவாக இருந்தும், தனித் தொகுதிகளில் திமுகவை விட அதிமுக அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற்றது. குறிப்பாக, பொன்னேரி, வாசுதேவநல்லூர், அவிநாசி உள்ளிட்ட பல தனித் தொகுதிகளில் நீண்டகாலமாக DMK போட்டியிடவில்லை. தற்போது தனித் தொகுதிகளில் கவனம் செலுத்த திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாம்.


