News April 3, 2024

ஆற்காடு அருகே காரில் வந்தவரிடம் ரூ.1,27,000 பறிமுதல்

image

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாபாக்கத்தில், தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர் பாண்டியன் தலைமையில் இன்று(ஏப்.3) அதிகாலை அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது சென்னை நோக்கி சென்ற காரில் சோதனையிட்டதில், பிரபாவதி என்பவர் ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் கொண்டு சென்றது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்து ஆற்காடு வட்டாட்சியர் அருள் செல்வத்திடம் ஒப்படைத்தனர்.

Similar News

News July 4, 2025

இராணிப்பேட்டை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

இராணிப்பேட்ட மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (04/07/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. *இரவில் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*.

News July 4, 2025

ராணிப்பேட்டையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சலுகை!

image

உயர்கல்வியைத் தொடர விரும்பும் திருநங்கை, திருநம்பி, இடைப்பாலினர்களுக்கு, கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் திருநங்கையர் நலவாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக சமர்ப்பித்து பயன்பெறலாம் என ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News July 4, 2025

ராணிப்பேட்டை மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் (1/2)

image

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில் <>இந்த லிங்க் <<>>மூலம் அல்லது (044‑2495 1495) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மேலும், மாவட்ட எஸ்.பி-யிடமும் (9498100660) மாவட்ட மாஜிஸ்திரேட்டிடமும் புகார் செய்யலாம். இந்த எண்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்க. <<16937729>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!