News April 3, 2024
ஆற்காடு அருகே காரில் வந்தவரிடம் ரூ.1,27,000 பறிமுதல்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாபாக்கத்தில், தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர் பாண்டியன் தலைமையில் இன்று(ஏப்.3) அதிகாலை அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது சென்னை நோக்கி சென்ற காரில் சோதனையிட்டதில், பிரபாவதி என்பவர் ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் கொண்டு சென்றது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்து ஆற்காடு வட்டாட்சியர் அருள் செல்வத்திடம் ஒப்படைத்தனர்.
Similar News
News February 16, 2026
ராணிப்பேட்டை அருகே தூக்கில் தொங்கிய நபர்!

ராணிப்பேட்டை, சயனபுரம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் முருகேசன்(47). இவர் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்தார். நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதற்காக இறந்தார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 16, 2026
ராணிப்பேட்டை: கவனிக்காத மகன்கள்.. தாய் தற்கொலை!

கணபதிபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் பொன்னம்மாள்(80). உடல் நல குறைவால் இருந்த அவரை மகன்கள் சரிவர கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் நேற்று (பிப்.15) பொன்னம்மாள் அவரது நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தக்கோலம் போலீசார் உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தற்கொலை குறித்து தக்கோலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 16, 2026
ராணிப்பேட்டையில் இளைஞர் துடிதுடித்து பலி

வேடல் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (45). இவர் நேற்று (பிப்.15) காந்திநகர் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது மரக்கட்டைகள் ஏற்றி சென்ற வேனின் பின்பக்கமாக பைக் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஏழு மலையை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதித்து வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.


