News April 7, 2025

ஈரோட்டில் 3 மாதங்களில் மட்டும் 19 பேர் பலி

image

ஈரோடு ரயில் நிலையங்களை சுற்றி கடந்த 3 மாதங்களில் மட்டும் 19 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர் என ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிகாரி தெரிவித்தார். மேலும் 18 பேர் உடல் அடையாளம் காணப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரும்பாலனோர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அடிபட்டு உயிரிழந்ததாகவும், இது போன்ற விபத்துகளை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

Similar News

News August 5, 2025

ஈரோடு: வட மாநில தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

image

ஒடிசா மாநிலம், பர்கோச்சா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் ஜக்தலா, 48. இவர் கடந்த 4 மாதங்களாக சிப்காட் பகுதியில் தங்கி இருந்து  தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் காலை வேலைக்கு சென்றவர் அங்கு மேற்பார்வையாளர் இடத்தில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியவர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்து விட்டார். இது குறித்து சென்னிமலை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 5, 2025

ஈரோடு: மானிய விலையில் மக்காச்சோள விதை விநியோகம்

image

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் 5402 ஹைபிரிட் மக்காச்சோள விதை மானிய விலையில் வேளாண்மை துறை மூலமாக தமிழக அரசால் வழங்கப்படுகிறது. தாளவாடி மற்றும் துணை வேளாண்மை மையம் அறை பாளையம் ஆகிய கிடங்குகளில் இருப்பு உள்ளது, தேவைப்படும் விவசாயிகள் தாளவாடி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும் தொடர்பு எண் 9688491749.

News August 5, 2025

புதுப்பாளையம் குருநாதசாமி கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

அந்தியூர் புதுப்பாளையத்தில் வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை குருநாதசாமி கோவில் தேர் திருவிழா கால்நடை சந்தையுடன் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் விழாவிற்கு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, சார் ஆட்சியர் சிவானந்தம், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

error: Content is protected !!