News April 7, 2025

சீமானுக்கு கெடு விதித்த நீதிமன்றம்

image

திருச்சி, டிஐஜி வருண்குமார் வழக்கில் இன்று (ஏப்.07) சீமான் நேரில் ஆஜராக ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகாத நிலையில், இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராகவில்லை என்றால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று திருச்சி மாவட்ட நீதிமன்றம் கெடு விதித்து, உத்தரவிட்டுள்ளது.

Similar News

News April 17, 2025

திருச்சி: புனித வெள்ளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

கிறிஸ்தவர்களின் புனித வெள்ளியை முன்னிட்டு திருச்சியிலிருந்து நாகை, வேளாங்கண்ணி மற்றும் பல்வேறு நகரங்களுக்கு ஏப்.18, 19, 20 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. குறிப்பாக திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை, காரைக்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு 175 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

News April 17, 2025

திருச்சி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Agri Research Analyst பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்து தெரியப்படுத்துங்கள்…

News April 17, 2025

திருச்சி தபால் அலுவலகங்களில் சிறப்பு சலுகை

image

சித்திரை விழாவை முன்னிட்டு திருச்சி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தபால் அலுவலகங்களிலும், இந்திய அஞ்சல் துறை சர்வதேச விரைவு தபால் மற்றும் பார்சல் மூலமாக குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் சேவை சிறப்பு கவுண்டர்கள் மூலமாக ஏப்-30 வரை செயல்பட உள்ளது என்று திருச்சி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். திருச்சி மக்களே இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!