News April 7, 2025
சீமானுக்கு கெடு விதித்த கோர்ட்!

நாதக தலைவர் சீமான் மாலை 5 மணிக்குள் நேரில் ஆஜராக திருச்சி குற்றவியல் கோர்ட் கெடு விதித்துள்ளது. தன்னையும், தனது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இன்று காலை வழக்கு விசாரணையின்போது சீமான் ஆஜராகவில்லை. இதனால் மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.
Similar News
News April 18, 2025
மாரடைப்பு: கிரிக்கெட் மைதானத்தில் நடுவர் மரணம்

கிரிக்கெட் போட்டியின் இடையே நடுவர் சுருண்டு விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான பாமா கோப்பை போட்டியில் KRP XI CC மற்றும் Crescent CC அணிகள் மோதின. 11ஆவது ஓவரின்போது நடுவர் பிரசாத் மல்காஓங்கர் சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஹாஸ்பிடல் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News April 18, 2025
மின்சார ரயில் பயணிகளுக்கு குளு குளு குட் நியூஸ்..

சென்னையில் நாளை முதல் குளிர்சாதன மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் காலை 7 மணிக்கு குளிர்சாதன மின்சார ரயில் சேவை தொடங்குகிறது. கடற்கரை – செங்கல்பட்டு இடையே 2 சேவைகளும், தாம்பரம் – கடற்கரை இடையே ஒரு சேவையும் இயக்கப்படவுள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் மக்களுக்கு இனிப்பான செய்தியை தெற்கு ரயில்வே கொடுத்துள்ளது.
News April 18, 2025
நடிகர் ஸ்ரீ ஹாஸ்பிடலில் அனுமதி: குடும்பத்தினர்

நடிகர் ஸ்ரீ, ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் உடல்நிலை குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். நடிகர் ஸ்ரீ-யின் தனி மனித உரிமையை அனைவரும் மதிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். நடிகர் ஸ்ரீ குறித்த நிலை தெரியாததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.