News April 7, 2025
அனைத்து கடைகளிலும் தமிழ் பெயர் பலகை வைக்க உத்தரவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அனைத்து தொழிற்சாலைகளிலும், தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் எனவும், மே 15 ஆம் தேதிக்குள் திருப்பத்தூர் மாவட்டத்தில் முழுவதும் தமிழ் பெயர் பலகை வைக்க வேண்டும் எனவும், தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சிவசௌந்தரவல்லி இன்று (ஏப்ரல்.07) அறிவித்துள்ளார்.
Similar News
News April 10, 2025
இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருப்பத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் இன்று 09.04.2025 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களின் பகுதிகளில் இரவு நேரங்களில் ஏற்படும் அசம்பாவிதம், குற்ற செயல்கள் குறித்து தங்கள் பகுதி காவல் எல்லைகளில் உள்ள காவல் அதிகாரிகளை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
News April 9, 2025
திருப்பத்தூர்: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வாய்ப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட பொதுமக்கள் குறைதீர்வு முகாம் வரும் ஏப்.12ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. இதன் மூலம் ரேஷன் கார்டில் திருத்தும் செய்து கொள்ளலாம். திருப்பத்தூர்- காக்கங்கரை, நாட்றம்பள்ளி- கொத்தூர், வாணியம்பாடி- கல்லாப்பட்டி, ஆம்பூர்- வெங்கிளி ஆகிய நியாய விலைக் கடைகளில் இந்த முகாம் நடைபெறுகிறது. ஷேர் பண்ணுங்க.
News April 9, 2025
MRF டயர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ராணிப்பேட்டையில் இயங்கிவரும் MRF டயர் நிறுவனத்தில் Lead Trainee பணிக்கான 100 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. BA, BSC, BBA, BCA, B.Com அல்லது Diploma ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.18-25 வயதுக்குள் இருக்கும் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். ரூ.19,500 சம்பளம் வழங்கப்படும். மானிய விலையில் உணவக வசதி, மானிய போக்குவரத்து வசதி, இலவச காலனி, சீருடை வழங்கபடும். <