News April 7, 2025
SHARE MARKET: ஒரே நாளில் ₹19 லட்சம் கோடி ஸ்வாகா…!

வாரத்தின் முதல்நாளே தலையில் துண்டுபோடும் நிலைக்கு முதலீட்டாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்திய பங்குச் சந்தையில் அனைத்துத் துறைகளின் பங்குகளும் ரெட் (சரிவு) சிக்னலாகவே உள்ளன. சென்செக்ஸ் (-2,542), நிப்ஃடி (-810) கடும் வீழ்ச்சியை சந்தித்திருப்பதால், ₹19 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வரிவிதிப்பால் ஆசியா முழுவதுமே பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன.
Similar News
News April 18, 2025
₹10,000ஐ தொட்ட தங்கம் விலை

தமிழ்நாட்டில் 1 கிராம் சொக்கத் தங்கத்தின் விலை முதல் முறையாக ₹10,000-ஐ கடந்துள்ளது. சொக்கத் தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தங்கம், நேற்று ஒரு கிலோ ₹1 கோடியை கடந்தது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், இந்தியாவிலும் தங்கம் விலை ராக்கெட் போல உயருகிறது. இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹8,945-ஆக உள்ளது.
News April 18, 2025
சூடு பிடிக்கும் நியோமேக்ஸ் வழக்கு

லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றிய நியோமேக்ஸ் வழக்கு தொடர்பாக ₹600 கோடி மதிப்பிலான சொத்துகளை ED முடக்கியுள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த நியோமேக்ஸ், அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியது. இதில், சுமார் ₹5,000 கோடி ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், ₹121.80 கோடி (இன்றைய மதிப்பில் ₹600 கோடி) மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
News April 18, 2025
இப்பிரச்னை இருக்கா.. தேங்காய் தண்ணீரை குடிக்காதீங்க!

சம்மரில் உடல் சூட்டை தணிக்க, தேங்காய் தண்ணீர் பருகுவோம். ஆனால், உயர் ரத்த சர்க்கரை அளவு பிரச்னை இருப்பவர்கள், அடிக்கடி தேங்காய் நீரை குடிப்பதால், அது உடல்நல பிரச்னைக்கு வழிவகுக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, பழுப்பு நிற தேங்காயில் 6-8 கிராம் வரை சர்க்கரை இருப்பதால், அது ரத்த சர்க்கரை அளவை கூட்டிவிடும். அதே நேரத்தில், இளநீரில் சர்க்கரை அளவு குறைவு என்பதால், அதனால் பெரிய பாதிப்புகள் இல்லை.