News April 7, 2025

தாஜ்மஹாலில் வெளிநாட்டு பெண்ணுக்கு சோகம்

image

இந்தியாவை சுற்றிப் பார்க்க ஆசையாய் வந்த வெளிநாட்டு பெண், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தாஜ்மஹாலில் நடந்துள்ளது. செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த இளம்பெண்(28), தாஜ்மஹாலை பார்வையிடச் சென்றபோது, தொடக்கூடாத இடங்களில் தொட்டு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, சிசிடிவி காட்சி மூலம் ஆக்ராவைச் சேர்ந்த கரண் ரத்தோர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News April 18, 2025

₹10,000ஐ தொட்ட தங்கம் விலை

image

தமிழ்நாட்டில் 1 கிராம் சொக்கத் தங்கத்தின் விலை முதல் முறையாக ₹10,000-ஐ கடந்துள்ளது. சொக்கத் தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தங்கம், நேற்று ஒரு கிலோ ₹1 கோடியை கடந்தது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், இந்தியாவிலும் தங்கம் விலை ராக்கெட் போல உயருகிறது. இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹8,945-ஆக உள்ளது.

News April 18, 2025

சூடு பிடிக்கும் நியோமேக்ஸ் வழக்கு

image

லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றிய நியோமேக்ஸ் வழக்கு தொடர்பாக ₹600 கோடி மதிப்பிலான சொத்துகளை ED முடக்கியுள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த நியோமேக்ஸ், அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியது. இதில், சுமார் ₹5,000 கோடி ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், ₹121.80 கோடி (இன்றைய மதிப்பில் ₹600 கோடி) மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

News April 18, 2025

இப்பிரச்னை இருக்கா.. தேங்காய் தண்ணீரை குடிக்காதீங்க!

image

சம்மரில் உடல் சூட்டை தணிக்க, தேங்காய் தண்ணீர் பருகுவோம். ஆனால், உயர் ரத்த சர்க்கரை அளவு பிரச்னை இருப்பவர்கள், அடிக்கடி தேங்காய் நீரை குடிப்பதால், அது உடல்நல பிரச்னைக்கு வழிவகுக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, பழுப்பு நிற தேங்காயில் 6-8 கிராம் வரை சர்க்கரை இருப்பதால், அது ரத்த சர்க்கரை அளவை கூட்டிவிடும். அதே நேரத்தில், இளநீரில் சர்க்கரை அளவு குறைவு என்பதால், அதனால் பெரிய பாதிப்புகள் இல்லை.

error: Content is protected !!