News April 3, 2024

புதுவையில் 3 பேரிடம் ரூ1.61 லட்சம் மோசடி

image

புதுவையை சேர்ந்த தேவி என்பவர் ஆன்லைனில் பகுதிநேர வேலை தேடியுள்ளார். அப்போது டெலிகிராம் மூலம் மர்ம நபர்கள் லிங்க் அனுப்பி அவரிடமிருந்து ரூ.1,39,000 -த்தை ஏமாற்றியுள்ளனர். மேலும், இதே போன்று கார்த்திக் என்பவரிடம் ரூ.14,000, சந்திரசேகர் என்பவரிடம் ரூ.8,000 ஏமாற்றி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 18, 2025

புதுச்சேரியில் 47.6 மி.மீ. மழை பொழிவு

image

புதுச்சேரியில், தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரி நகரப்பகுதியில் உப்பளம், ரெட்டியார் பாளையம், உருளையன்பேட்டை, நெல்லிதோப்பில் கனமழை பெய்தது. நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 47.6 மி.மீ., (4.76 செ.மீ.) மழை பதிவானது.

News November 18, 2025

புதுச்சேரியில் 47.6 மி.மீ. மழை பொழிவு

image

புதுச்சேரியில், தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரி நகரப்பகுதியில் உப்பளம், ரெட்டியார் பாளையம், உருளையன்பேட்டை, நெல்லிதோப்பில் கனமழை பெய்தது. நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 47.6 மி.மீ., (4.76 செ.மீ.) மழை பதிவானது.

News November 18, 2025

புதுச்சேரியில் பேனர் வைக்க தடை

image

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “புதுச்சேரியில், பொதுஇடங்களில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள பேனர்கள், கட் அவுட்கள் மற்றும் விளம்பர பலகைகள் வைக்க பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு வரும் டிச.14ம் தேதிவரை அமலில் இருக்கும். இந்த தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என கூறியுள்ளார்

error: Content is protected !!