News April 7, 2025
19 வயது நபரின் நுரையீரலில் 7 ஆணிகள்!

மகாராஷ்டிராவில் இளைஞரின் நுரையீரலில் சிக்கியிருந்த 7 ஆணிகளை 3 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு டாக்டர்கள் அகற்றியுள்ளனர். தூங்கும்போது தவறுதலாக ஆணிகளை விழுங்கியதாக கூறி அந்த 19 வயது இளைஞர் மும்பையில் உள்ள பிம்பிரி ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார். இதனைக் கேட்டு முதலில் ஷாக்கான டாக்டர்கள் பின்னர் தங்களது டூட்டியை செய்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர். தூங்கும் போது கூட ஜாக்கிரதையா இருங்க மக்களே!
Similar News
News January 12, 2026
ஈரோடு பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஈரோடு மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0424-2214282, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)
News January 12, 2026
‘வா வாத்தியார்’ ரிலீசில் நீடிக்கும் சிக்கல்

பொங்கல் விருந்தாக கார்த்தியின் ‘வா வாத்தியார்’ ஜன.14-ல் ரிலீசாகும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவித்திருந்தார். ₹21 கோடி கடன் பிரச்னை காரணமாக பட ரிலீசிற்கு மெட்ராஸ் HC தடைவிதிக்க, இன்று ₹3.75 கோடி தொகையை அவர் திருப்பி செலுத்தினார். இதையடுத்து ரிலீசிற்கு விதித்த தடையை நீக்குமாறு வாதிடப்பட்ட நிலையில், முழுத் தொகையை செலுத்த கோர்ட் உத்தரவிட்டது. இதனால் வா வாத்தியார் ரிலீசில் சிக்கல் நீடிக்கிறது.
News January 12, 2026
பண்டிகை முடிந்து பொங்கல் பரிசு: புதுச்சேரி அரசு

பொங்கல் பண்டிகைக்கு பின் பொங்கல் பரிசுத் தொகை ₹3,000 மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசாக ₹4,000 வழங்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நிதிச்சுமை காரணமாக பொங்கல் பரிசுத்தொகை ₹3,000-ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பண்டிகைக்கு பின் பொங்கல் பரிசு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


