News April 7, 2025

வாணியம்பாடி தனியார் பள்ளி காவலாளி கத்தியால் குத்தி கொலை

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட இக்பால் சாலையில் உள்ள தனியார் பள்ளி காவலாளி இர்பான் என்பவரை இன்று (07.04.2025) காலை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். சடலத்தை கைப்பற்றி வாணியம்பாடி நகர காவல் துறையினர் விசாரணை கொலையாளிகள் குறித்தும் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Similar News

News April 9, 2025

MRF டயர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

image

ராணிப்பேட்டையில் இயங்கிவரும் MRF டயர் நிறுவனத்தில் Lead Trainee பணிக்கான 100 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. BA, BSC, BBA, BCA, B.Com அல்லது Diploma ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.18-25 வயதுக்குள் இருக்கும் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். ரூ.19,500 சம்பளம் வழங்கப்படும். மானிய விலையில் உணவக வசதி, மானிய போக்குவரத்து வசதி, இலவச காலனி, சீருடை வழங்கபடும். <>விண்ணப்பிக்கலாம்<<>>.

News April 9, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை மது கடைகளுக்கு விடுமுறை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மது கூடங்கள் நாளை 10 ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் விடுமுறை. மீறி மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்ததால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News April 9, 2025

தாய் கண்டித்ததால் எருக்கம் பால் குடித்த மாணவி 

image

ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி சேர்ந்தவர் செந்தில் இவரது மகள் மதுமிதா (வயது 15). இவர் தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது தாயார் தனது மகளை கண்டித்தார். இதனால் மாணவி பள்ளி அருகே எருக்கம் பால் குடித்து மயங்கி விழுந்தார். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ஜோலார்பேட்டை போலீசார்  விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!