News April 7, 2025

தேனீ கடித்ததில் பனை மரத்திலிருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு

image

கரூர் வாங்கல் வஉசி தெருவை சேர்ந்தவர் தென்னரசு (33). இவர் நேற்று சங்க கொட்டாய் முனியப்பன் கோவில் அருகே உள்ள பனைமரத்தில் ஏறி உள்ளார். அங்கு மரத்தில் மேலிருந்த .தேனீ கடித்ததில் அங்கிருந்து கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் உடல் கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவி பிரியங்கா புகாரின் பேரில் வாங்கல் போலீசார் நேற்று வழக்கு பதிவு.

Similar News

News April 8, 2025

கரூர் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம்

image

கரூர் : குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், அரவக்குறிச்சி, மன்மங்கலம், புகலூர், ஆகிய பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வருகிற ஏப்.12ஆ தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றை பயன்படுத்திக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News April 8, 2025

கண் நோய் தீர்க்கும் கரூர் மாரியம்மன்!

image

மாரியம்மன் என்றால் எலோருக்கும் ஞாபகம் வருவது சமயபுரம் மாரியம்மன் தான். ஆனால், அதற்கு சற்று அருகில் உள்ள கரூர் மாரியம்மன் கோயிலுக்கும் பல தனிச் சிறப்புகள் உண்டு. இந்தக் கோயிலில் வழங்கப்படும் திருநீறு மருத்துவ குணம் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இதை நெற்றியில் பூசிக் கொண்டால் கண், தலை, தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. பிரச்சனை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 8, 2025

கரூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை!

image

கரூரில் எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் 5ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.600 முதல் ரூ.1800 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு <>http://tnvelaivaaippu.gov.in<<>> என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்கலாம் அல்லது கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்புகொண்டு விண்ணப்பத்தினை இலவசமாக பெறலாம்.( ஷேர் செய்யுங்கள்)

error: Content is protected !!