News April 7, 2025
நட்புடன் பேசி ரூ.33 லட்சம் மோசடி செய்த தம்பதியினர் கைது

தூத்துக்குடியை சேர்ந்த ஒருவருக்கு பெண் ஒருவர் முகநூலில் அறிமுகமாகி வேலை வாய்ப்பிற்காக பணம் தேவைப்படுவதாக கூறி ரூ.33,73,190 பெற்றுள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அந்த நபர் NCRP-ல் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கேரளாவை சேர்ந்த பாலமுருகன்(32), அவரது மனைவி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில் அவர்களை கைது செய்து நேற்று(ஏப்.6) சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 31, 2025
தூத்துக்குடி போலீஸ் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் 2026 புத்தாண்டை முன்னிட்டு அனுமதியின்றி DJ பார்ட்டி நடத்துதல், பைக் ரேஸ், வீலிங், அதிவேக ஓட்டம், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. புத்தாண்டு பாதுகாப்புக்காக 2500 போலீசார், சிசிடிவி, டிரோன் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News December 31, 2025
தூத்துக்குடி எஸ்.பி டிரான்ஸ்பர்.. புதிய எஸ்.பி நியமனம்!

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட்ஜானுக்கு ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியிட மாற்றம் வந்தது. இந்நிலையில் தொடர் பண்டிகை காலங்கள் வந்ததால் அவர் பணி நீட்டிப்பு செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார். இப்படியான சூழலில் அவர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது நெல்லை எஸ்.பி சிலம்பரசன் தூத்துக்குடி எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
News December 31, 2025
தூத்துக்குடி மக்களுக்கு காவல்துறை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நடைபெறுவதை முன்னிட்டு இன்று (31.12.2025) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெறவுள்ளது என மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


