News April 7, 2025

டூவிலர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

image

விருதுநகர் அருகே பி.குமாரலிங்கபுரத்தை சேர்ந்த அமுதவள்ளி(39), மாரீஸ்வரி(39), இரவது மகள் முத்துமாரி(21), மீனாட்சி(14) உள்ளிட்டோர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மீசலூர் அருகே நடந்து சென்ற போது சரவணக்குமார்(25) என்பவர் ஓட்டிவந்த டூவிலர் இவர்கள் மீது மோதியது. இதில் 5 பேரும் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அமுதவள்ளி, சரவணன் ஆகியோர் உயிரிழந்தனர்.

Similar News

News April 17, 2025

விருதுநகரில் சிறந்த பாடலுக்கு ரூ.50,000 பரிசு

image

சர்வதேச கூட்டுறவு ஆண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட பொதுமக்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், துறை அலுவலர்களிடமிருந்து கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பாடல், இசையமைக்கப்பட்டு, 5 நிமிடங்கள் ஒலிப்படப்ப கூடிய வரையில் இருக்க வேண்டும். இதில், சிறந்த பாடலுக்கு ரூ.50,000 பண முடிப்பு வழங்கப்படும். பாடலை tncu08@gmail.com மின்னஞ்சலில் மே 30க்குள் அனுப்ப வேண்டும்.

News April 17, 2025

கருணாநிதி நினைவிடத்தில் ஸ்ரீவி கோபுரம்

image

இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற உள்ளது. இதில் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டதற்கு விமர்சனங்கள் எழுந்தன.இந்நிலையில் கல்லறை மீது கோவில் கோபுரங்களை வரைந்தது தவறான செயல். இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

விருதுநகர் ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த KKSSR

image

விருதுநகரில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயிலும் எத்துப்பல் கொண்ட 600 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஆட்சியர் ஜெயசீலன் உதவி செய்தார். இதில் மக்களின் குறையறிந்து அக்குறைகளைக் கடமையென எண்ணிச் சேவையாற்றுவதே அரசுப் பணியாளர்களின் கடமை. அத்தகைய கடமையைச் சிறப்பாகச் செய்து வரும் ஆட்சியர் ஜெயசீலனுக்கு வாழ்த்துகள் என அமைச்சர் KKSSR தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!