News April 7, 2025
புதுக்கோட்டை, திருவாரூர், தென்காசியில் இன்று விடுமுறை

புதுக்கோட்டை, திருவாரூர், தென்காசி மாவட்டங்களில் இன்று(ஏப்.7) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம், திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டம், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் குடமுழுக்கையொட்டி இவ்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாற்றமின்றி நடைபெறும். SHARE IT
Similar News
News April 18, 2025
மீண்டும் தொடங்கும் ‘இந்தியன் 3 ’

கமலின் ‘இந்தியன் 2’ திரைப்படம் படுதோல்வி அடைந்ததால், ‘இந்தியன் 3 ’ கிடப்பில் போடப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், திடீர் திருப்பமாக Lyca நிறுவனம் அப்படத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட சுபாஸ்கரன் இன்று மதியம் சென்னை வரவுள்ளார். இந்த சந்திப்பின்போது அன்பு & அறிவு இயக்கத்தில் ₹250 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள ‘KH 237’ படம் குறித்தும் கமல் பேச உள்ளாராம்
News April 18, 2025
விண்வெளி துறைக்கு க்ரீன் சிக்னல்.. TN அரசு சாதிக்குமா?

‘தமிழ்நாடு விண்வெளி கொள்கை 2025’ திட்டத்திற்கு CM ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் ₹10,000 கோடி அளவிலான முதலீடுகளை ஈர்க்க உள்ளதாகவும், தமிழ்நாட்டில் விண்வெளித் துறைக்கு தகுதியான பட்டதாரிகளையும், ஊழியர்களையும் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
News April 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை. ▶குறள் எண்: 309 ▶குறள்: இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை ▶பொருள்: எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.