News April 6, 2025
குஜராத் அணிக்கு 153 ரன்கள் இலக்கு

நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன. இதில், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் பேட்ஸ்மேன் நிதிஷ்குமார் ரெட்டி அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். பவுலர்கள் சிராஜ் நான்கு விக்கெட்டுகளையும் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Similar News
News April 17, 2025
கொளுத்தும் வெயில்.. அம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி?

உடல் சூட்டை தணிப்பது அம்மை நோயை வராமல் தடுக்கும் *வாரம் 3 நாள்கள் தலைக்குக் குளிக்கலாம் *வெறும் தண்ணீர் குடிக்காமல், எலுமிச்சை சாறு, நன்னாரி போன்றவற்றைச் சேர்க்கலாம் *தாழம்பூவுக்கு அம்மையைத் தடுக்கும் குணம் உண்டு. டாக்டர்களின் ஆலோசனையோடு தாழம்பூ மணப்பாகு எடுத்துக்கொள்ளலாம். குளிக்கும் நீரில் வேப்பிலையும் மஞ்சளும் சேர்த்து குளிக்கலாம் *இளநீர், கரும்பு ஜூஸ், பனஞ்சாறு குடிக்கலாம். SHARE IT.
News April 17, 2025
பெண்களுக்கு மானிய விலையில் கிரைண்டர்: TN அரசு

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 2,000 பேருக்கு உலர், ஈரமாவு அரைக்கும் கிரைண்டர் வாங்க ₹1 கோடி மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ₹10,000 (அ) அதற்கு மேல் மதிப்பிலான கிரைண்டர் வாங்கும்போது, மொத்த விலையில் 50% (அ) அதிகபட்சமாக ₹5000 மானியம் கிடைக்கும். இத்திட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக மினிஸ்டர் கீதாஜீவன் கூறினார்.
News April 17, 2025
சிமெண்ட் விலை அதிகரிக்க வாய்ப்பு

தேவை அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் சிமெண்ட் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நுவாமா நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. 2025 ஏப்ரல் மாத நிலவரப்படி, தென்னிந்தியாவில் அதிகமாக விலை உயர்ந்திருப்பதாகவும், நாட்டின் மத்திய, கிழக்கு, வட மாநிலங்களில் விலை அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இம்மாத இறுதியில் விலை சற்று குறையும் என டீலர்கள் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.