News April 6, 2025

தூத்துக்குடியில் ‘புத்தொழில் களம்’ சிறப்பு நிகழ்ச்சி

image

தூத்துக்குடி மாவட்டத்தின் கட்டமைப்பை முன்னேற்றும் விதமாகவும், மேம்படுத்துவதன் வழியாகவும், இந்தியாவின் முதல் மாவட்டமாக மாற்றும் விதமாக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் ‘புத்தொழில் களம்’ என்ற நிகழ்ச்சி (ஏப் 6) இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 4, 2025

தூத்துக்குடி: கொலை குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை

image

கடம்பூர் அக்ராஹிரம் தெருவில் வசித்து வந்த தசரதனின் மகன் அஸ்வத் குமார் (33). தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை தசரதனை கொலை செய்துவிட்டு சிறையில் இருந்து அண்மையில் வெளியே வந்த அஸ்வத் குமார், தனது மனைவி குழந்தைகளை பார்க்க முடியவில்லை என நினைத்து கடம்பூரில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டார்.

News December 4, 2025

தூத்துக்குடியில் கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

image

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக தூத்துக்குடியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம் .SHARE பண்ணுங்க.

News December 4, 2025

தூத்துக்குடியில் நகை பறித்த 2 பேர் கேரளாவில் கைது

image

தூத்துக்குடியில் கடந்த வாரம் ஒரே நாளில் ரஹமதுல்லா புரத்தைச் சேர்ந்த அமுதா மற்றும் மாதவன் நகர் பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி ஆகியோரிடம் 18 பவுன் தங்க நகையை 2 பேர் பறித்து சென்றனர். இது சம்பந்தமாக தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர விசாரணை நடத்தியதில் கேரளாவில் பதுங்கி இருந்த தூத்துக்குடி பண்டாரம்பட்டி சேர்ந்த பாரத், அஜித்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர்.

error: Content is protected !!