News April 6, 2025
தி.மலை மாவட்டத்தில் 439 காலி பணியிடங்கள் அறிவிப்பு

தி.மலை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 131 அங்கன்வாடி பணியாளர், 54 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 254 அங்கன்வாடி உதவியாளர்கள் என மொத்தம் 439 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th, 12th பாஸ் போதும். ஆர்வமுள்ளவர்கள், www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் 23.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். *ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்ட அனைத்து பெண்களுக்கும் ஷேர் பண்ணுங்க*.
Similar News
News December 19, 2025
தி.மலை: ரூ.1,12,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை- CLICK

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) காலியாக உள்ள 764 Senior Technical Assistant மற்றும் Technician பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் ITI முடித்திருந்தது 18 முதல் 28 வயது உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.1,12,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன-01 குள் இந்த லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம். SHARE
News December 19, 2025
தி.மலை: ATM கார்டை திருடி ரூ.70,000 எடுத்த பலே கில்லாடி!

ஆரணி அருகே கைக்கிளாந்தாங்கல் கிராமத்தில் அம்பிகா என்பவரின் வீட்டிலிருந்து ஏடிஎம் கார்டை திருடி ரூ.70 ஆயிரம் பணம் எடுத்த மயில்வண்ணன் என்பவரை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ரொக்க பணமும், ஏடிஎம் கார்டும் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News December 19, 2025
தி.மலை: “திமுகவிற்கு ஆப்பு!”

தி.மலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர் “கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கிறது. பல்வேறு இடங்களில் இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர். ஆனால் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் வரும் தேர்தலில் திமுகவிற்கு ஒட்டுமொத்தமாக ஆப்பு வைக்க வேண்டும் என்றார்.


