News April 6, 2025

பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட தூக்கு பாலம் பழுது

image

ரூ.550 கோடியில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பால தூக்குப் பாலத்தில் பழுது ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட தூக்கு பாலம் தற்போது பழுதாகி இருப்பதாக வெளி வரும் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குத்து பாலம் ஒரு பக்கம் தூக்கியும், இன்னொரு பக்கம் இறக்கமாக இருந்ததால் அதனை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News April 17, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உட்பட 3 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என IMD தெரிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகள் மற்றும் வேலைகளை அதற்கேற்றாற் போல் தகவமைத்து கொள்ளவும், மழை நேரங்களில் குழந்தைகளை கவனத்துடன் கையாளவும் அறிவுறுத்தப்படுகிறது. மழை நேர மின்தடை புகார்களுக்கு 94987 94987 என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க

News April 17, 2025

போதையில் இருவரை அரிவாளால் வெட்டியவர்கள் கைது

image

ரெகுநாதபுரம், மேலுார் செல்லும் சாலையில் (ஏப்.15) இரவு முனீஸ்வரன், ராஜகுரு என்ற இருவர் சாலையில் நடந்து சென்ற போது மது போதையில் வந்த இருவர் முனீஸ்வரனிடம் அலைபேசியை கேட்டு தகராறு செய்தனர். அவர்கள் தர மறுத்ததால் இருவரையும் அரிவாளால் வெட்டினார். இது தொடர்பாக கார்மேகம்(27), சூர்யா(26), ஆகியோரை திருப்புல்லாணி போலீசார் கைது செய்தனர்.(இத்தகைய சூழலில் இரவு ரோந்து பணி காவலர்களை அழைக்கலாம்) *ஷேர் பண்ணுங்க

News April 16, 2025

ஏர்வாடி தர்காவிற்கு புதிய நிர்வாகிகள்

image

ஏர்வாடியில் ஒவ்வொரு மூன்று ஆண்டிற்கு ஒரு முறை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளால் தர்கா நிர்வாகம் நிர்வகிக்கப்படுகிறது.தர்கா நிர்வாகம் அடுத்த மாதம் நிறைவுக்கு வரும் நிலையில் உள்ளது.ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவராக அகமது இப்ராகிம்,செயலாளராக சித்திக்,உதவி தலைவராக முகம்மது சுல்தான் ஆகியோரும் மற்றும் 18செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

error: Content is protected !!