News April 6, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 7, 2025
மோடியை காணவில்லை: ராகுல்

டிரம்ப் வரிவிதிப்பால், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் இன்று ₹19 லட்சம் கோடியை இழந்துள்ள நிலையில், மோடியை எங்கும் காணவில்லை என ராகுல் விமர்சித்துள்ளார். இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்காவில் அதிக வரி விதிக்கப்படும் என்ற யதார்த்தத்தை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும், உற்பத்தி அடிப்படையிலான பொருளாதாரத்தை உருவாக்குவதைத் தவிர நமக்கு வேற வழியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News April 7, 2025
பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு? அமைச்சர் பதில்

TN முழுவதும் இன்னும் சில நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால், மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை காலம் நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இதுகுறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், காலநிலை மேலாண்மை குழு பரிந்துரை அடிப்படையில், பள்ளி திறப்பு குறித்தும், விடுமுறை நீட்டிப்பு குறித்தும் முடிவு செய்யப்படும் என்றார்.
News April 7, 2025
பெண்களுக்கு `அந்த’ விஷயம் திருப்தியில்லை… ஆய்வு

பெண்களில் 3-ல் 2 பேருக்கு தங்கள் மார்பகங்களின் அளவில் திருப்தி இல்லையென உலகளாவிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 40 நாடுகளில் 18,000 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 29% பெண்கள் தான் திருப்தி தெரிவித்தனர்; பெரியதாக வேண்டுமென்று 48% பேரும், சிறியதாக இருந்தால் நன்றாக இருக்குமென்று 23% பேரும் தெரிவித்தனர். மார்பகம் பற்றிய பெண்களின் எண்ணம் அவர்களின் உடல், மனநலத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறதாம்.