News April 6, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி அப்பரண்டீஸ் ஷிப் சேர்க்கை முகாம், கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாவட்ட திறன் பயிற்சி அலுவலக வளாகத்தில் வரும் 15ஆம் தேதி நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குனரை நேரிலையோ, அல்லது 9499055861 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 7, 2025
கடலூர்: முன்னாள் படைவீரர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

முன்னாள் படைவீரர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. அதனால் தொழில்களில் பயிற்சி பெற விரும்பும் முன்னாள் படைவீரர்கள் உடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரம் பெற கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ 04142-220732 தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News April 7, 2025
கடலூர்: ரூ.15,000 மாத சம்பளத்தில் வேலை

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு நிர்வாகி (Business Development Executive) பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் இங்கே<
News April 7, 2025
கடலூரில் வேல் கோட்டம் உள்ள கோயில் எது தெரியுமா?

கடலூர் புதுவண்டிபாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் ஆலயம் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயமாகும். இங்கு “வேல் கோட்டம்” தனியே அமைந்துள்ளது. இதற்கு ஞாயிறு, கிருத்திகை, பூச நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இந்த வேலை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு எல்லாவித பலன்களும், தீராத கொடிய நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.