News April 6, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி நாரா சைதன்யா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “போலியான உடனடி கடன் செயலி மூலம் கடன் பெறுபவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் பறிப்பார்கள். ஆகையால் உடனடிக் கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம். வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக வலைதள குழுக்களில் தெரியாத நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங்கை நம்ப வேண்டாம்” என்றார்
Similar News
News December 10, 2025
புதுவை: விவசாய கூலி தொழிலாளி திடீர் இறப்பு

பாகூர், அரங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (63). விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம், அரங்கனூர் ஏறமுடி அய்யனார் கோயில் அருகே, வயலில் பூச்சி மருந்து அடித்தபோது, அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாகூர் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.
News December 10, 2025
புதுவை: விவசாய கூலி தொழிலாளி திடீர் இறப்பு

பாகூர், அரங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (63). விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம், அரங்கனூர் ஏறமுடி அய்யனார் கோயில் அருகே, வயலில் பூச்சி மருந்து அடித்தபோது, அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாகூர் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.
News December 9, 2025
காரைக்காலில் கார்னிவல் விழா குறித்து ஆலோசனை

காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கார்னிவல்- 2026 நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் காமராஜர் நிர்வாக வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் திருமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாக தியாகராஜன், ஆட்சியர் ரவி பிரகாஷ் கலந்து கொண்டனர். மேலும் கார்னிவல் விழா ஜன.15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மற்றும் மலர் கண்காட்சி ஜன.15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.


