News April 6, 2025
தர்மபுரியில் விரைவில் புற்றுநோய் கதிர்வீச்சு மையம்

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு வகையான புற்றுநோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெரிய நகரில் உள்ள வசதிகள் தற்போது இங்கே நவீன கதிர்வீச்சு சிகிச்சைகள் அளிக்க தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக புதிக கட்டடம் கட்டப்பட்டுள்ளது, விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
Similar News
News April 11, 2025
மகள் சாவில் சந்தேகம் போலீசில் தாய் புகார்

மோப்பிரிப்பட்டியை சேர்ந்த பிரகாஷ்-ஜெயசுதா தம்பதிக்கு நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது பிரகாஷ், ஜெயசுதாவை தாக்கியுள்ளார், அதனை தொடர்ந்து ஜெயசுதா மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக ஜெயசுதாவை அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜெயசுதாவின் தாய் நேற்று அரூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
News April 11, 2025
தர்மபுரி மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

▶️தர்மபுரி மாவட்ட ஆட்சியர் 04342231500 ▶️மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது): 231500 ▶️தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் 9445000908 ▶️தர்மபுரி தீயணைப்பு நிலையம் 04342230100 ▶️தர்மபுரி போக்குவரத்து அலுவலகம் 9384808242 ▶️தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 9499055945 முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
News April 11, 2025
தனியார் மருத்துவமனையில் ரூ.3 கோடி மோசடி

தர்மபுரி சேலம் சாலை உள்ள தனியார் மருத்துவமனையில் மேலாண்மை இயக்குநர் சங்கீதா மருந்துகள் வழங்கும் பிரிவில் நேற்று ஆய்வு மேற்கொண்ட போது, உபகரணங்கள் வாங்குவதில் சுமார் 3 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பது கண்டுபிடித்து தர்மபுரி எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்தார். மகேஸ்வரி, கஸ்தூரி கார்மேகம், நந்தேஷ்குமார் ஆகியோர் பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரையும் காவலர்கள் கைது செய்தனர்.