News April 6, 2025
₹43 லட்சம் கோடியில் பிரம்மாண்ட கட்டடம்!

போயிங் ஆலையை விட 5 மடங்கு பெரியது. 20 எம்பையர் ஸ்டேட் கட்டடத்தை விழுங்கும் அளவுக்கு உலகின் மிகப் பெரிய கட்டடத்தை எழுப்பி வருகிறது சவுதி அரசு. சுற்றுலாவை ஈர்க்க ரியாத்தில் சுமார் ₹43 லட்சம் கோடி செலவில் 400 மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்பட்டு வருகிறது. ஆடம்பர ஓட்டல்கள், தியேட்டர்கள், ரூப் டாப் கார்டன்கள் என அத்தனையும் இதற்குள் இருக்குமாம். 2030க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Similar News
News April 9, 2025
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவை ஆளும் காங்கிரஸ் அரசு, அங்கு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருப்பதாகவும், ஆனால், நாட்டில் அக்கணக்கெடுப்பை நடத்த மோடியும், ஆர்எஸ்எஸ்சும் மறுப்பதாகவும் அவர் சாடினார். சிறுபான்மையினருக்கு கிடைக்க வேண்டிய பங்கை அவர்கள் மறுப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
News April 9, 2025
BREAKING: குமரி அனந்தன் உடல் தகனம்

காங்கிரஸ் EX MP குமரி அனந்தனின் உடல், அரசு மரியாதைக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது. சென்னையில் தமிழிசையின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த குமரி அனந்தனின் உடல், பிறகு வாகனத்தில் ஊர்வலமாக வடபழனிக்கு எடுத்து வரப்பட்டது. இதையடுத்து மின்மயானத்தில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது. 72 குண்டுகள் முழங்க போலீசார் மரியாதை செலுத்தினர். பின்னர் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு, அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.
News April 9, 2025
பாஜக தலைவர் ரேசில் முந்தும் ஆனந்தன் அய்யாசாமி

தமிழகத்துக்கான பாஜக தலைவர் யார் என்று வரும் 11ஆம் தேதி அமித் ஷா அறிவிக்கவுள்ளார். அந்த ரேசில் நான் இல்லையென்று அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்திருக்கும் நிலையில், நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன் பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில், தென்காசியைச் சேர்ந்த ஆனந்தன் அய்யாசாமி ரேசில் முந்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. தலித் வகுப்பைச் சேர்ந்த இவர், அமெரிக்காவில் பணிபுரிந்தவர்.