News April 6, 2025
மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார்(25) மணலூர்பேட்டையில் நேற்று எலக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிவக்குமார் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
Similar News
News October 26, 2025
கள்ளக்குறிச்சி: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993-இல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம் <
News October 26, 2025
கள்ளக்குறிச்சி: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

சின்னசேலம் அருகே நைனார்பாளையத்தைச் சேர்ந்த நீலகிரி மின் ஊழியர் கொளஞ்சியப்பன் (47), தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். கனமழையால் வீட்டில் மின் விளக்குகள் எரியாத நிலையில், நேற்று மாலை மெயின் சுவிட்சை ஆப் செய்யாமல் சுவிட்ச் போர்டை சரி செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கியது. மயங்கி விழுந்த அவரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.
News October 26, 2025
கள்ளக்குறிச்சி: ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலை மீட்பு!

கீழையூர், மாரியம்மன் கோயில் முன்புறத்தில், சாலையோரம் இருக்கும் புடைப்பு சிற்பத்தை பலரும் என்ன சிலை என தெரியாமலேயே வழிபட்டு வந்துள்ளனர். மூத்த கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன், கல்வெட்டு ஆர்வலர்களுடன் சென்று ஆய்வு செய்தபோது, 30 அங்குலம் உயரம், 26 அங்குலம் அகலம் கொண்ட சண்டிகேஸ்வரர் சிலை என தெரிய வந்தது. புடைப்பு சிற்பமான இதில் விரிசடையுடன் காதுகள் மற்றும் கழுத்திலும் அணிகலன்கள் அழகுற காணப்படுகிறது.


