News April 6, 2025
ஏப்ரல் 7 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில்

பாம்பன் புதிய பாலத்தை நாளை பிரதமர் மோடி திறந்து வைப்பதைத் தொடந்து, ஏப்ரல் 7ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. பாம்பன் பாலத்தின் வேலைகள் நடைபெற்று வந்ததால், ரயில்கள் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், வரும் 7ஆம் தேதி முதல் சேது உள்ளிட்ட ரயில்கள் ராமேஸ்வரம் வரை செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News April 7, 2025
உ.பி.யில் சட்டம் சீர்குலைந்து விட்டது.. SC கருத்து

உ.பி.யில் சட்டம் சீர்குலைந்து விட்டதாக சுப்ரீம் கோர்ட் (SC) கருத்து தெரிவித்துள்ளது. செக் மோசடி வழக்கில் கிரிமினல் வழக்குப்பதிவு செய்தது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த SC, சிவில் விவகாரங்களில் போலீசார் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்வதாகவும், இதை ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டது. இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் உ.பி. டிஜிபிக்கு SC ஆணையிட்டது.
News April 7, 2025
கணவரை விவாகரத்து செய்கிறாரா மேரி கோம்?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று தந்த EX குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், கணவர் ஆன்லரை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு குத்துச்சண்டை வீராங்கனையின் கணவரும், மேரி கோமும் காதலித்து வருவதாகவும், கோமின் பிஸினஸ் பார்ட்னராக அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2 பேரும் இருக்கும் புகைப்படம் வைரலான நிலையில், இதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என மேரி கோம் தெரிவித்துள்ளார்.
News April 7, 2025
சிறுமியிடம் சில்மிஷம்: பிரபல மத போதகர் மீது போக்சோ

மேடைகளில் ஆடிப்பாடி கிறிஸ்தவ மதம் குறித்து போதனை செய்யும் ஜான் ஜெபராஜ் ஞாபகம் இருக்கிறதா? இவர்தான் தற்போது போக்சோ வழக்கில் சிக்கியிருக்கிறார். சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அவர் மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவரைத் தேட தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.