News April 6, 2025
வக்ஃப் வாரிய மசோதா.. அடுத்து இனி என்ன?

வக்ஃப் வாரிய மசோதாவுக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் ஒப்புதல் அளித்துவிட்டன. இனி அதன்மீது என்ன நடக்கும் என தற்போது பார்க்கலாம். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். அதற்கு அவர் ஒப்புதல் அளித்ததும், மசோதா சட்டமாகும். பிறகு அதை கெஜட்டில் மத்திய அரசு வெளியிடும். அப்போது சட்டம் அமலாகும் தேதியும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
Similar News
News September 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 462 ▶குறள்: தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல். ▶பொருள்: தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.
News September 18, 2025
இந்தியா முழுவதும் நடவடிக்கை: டெல்லியில் இருந்து தொடக்கம்

இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை (SIR) தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளது. அதன் முதல் படியாக, டெல்லியில் இருந்து தொடங்கப்பட உள்ளது. அதன்படி, 2002 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத டெல்லிவாசிகள் அடையாள அட்டையை வழங்குவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், <<17723518>>SIR<<>>-ல் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட் வரும் அக்.7-ம் தேதி தீர்ப்பளிக்க உள்ளது.
News September 18, 2025
நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகள் என்கவுண்டர்

பாலிவுட் நடிகை <<17712293>>திஷா பதானி<<>> வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரை உ.பி. போலீசார் என்கவுண்டர் செய்தனர். அவர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும், கேங்ஸ்டர் கோல்டி பிரார் கேங்கைச் சேர்ந்தவர்கள் ஆவர். திஷா பதானியின் தங்கை குஷி பதானி, ஒரு சாமியாருக்கு எதிராக கருத்து தெரிவித்ததால், அவர்களது வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.