News April 5, 2025

மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

image

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.

Similar News

News November 7, 2025

6 ஓவர்களில் 148 ரன்களை விளாசிய ஆப்கானிஸ்தான்!

image

ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் 6 ஓவர்களில் 148 ரன்களை குவித்து அசத்தியுள்ளது. கேப்டன் குல்பதின் நைப் 50(12) ரன்களும், ஜனத் 46(11) ரன்களும் விளாசினர். 149 ரன்களை சேஸ் செய்த தென்னாப்பிரிக்க அணி, 6 ஓவரில் 99 ரன்களை மட்டுமே எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

News November 7, 2025

இறந்தவர் உயிருடன் வந்த அதிசயம்

image

இறந்துவிட்டதாக ஈமச் சடங்குகள் செய்யப்பட்டவர், உயிருடன் வந்தால் எப்படி இருக்கும்? சத்தீஸ்கரில் அதுதான் நடந்திருக்கிறது. மகன் புருஷோத்தமனை காணவில்லை என பெற்றோர் புகாரளித்துள்ளனர். அப்போது, போலீஸுக்கு கிணற்றில் ஒரு சடலம் கிடைத்தது. அதனை தனது மகன் என நினைத்து புருஷோத்தமனின் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். திடீர் ட்விஸ்டாக உறவினர் வீட்டிலிருந்த புருஷோத்தமன் வீடு திரும்பியுள்ளார். இதை என்ன சொல்வது?

News November 7, 2025

நடிகர் ஸ்ரீகாந்துக்கு மீண்டும் ED சம்மன்

image

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகி பின்னர் ஜாமினில் வெளிவந்தார். இதனையடுத்து கடந்த மாதம் 28-ம் தேதி ED அலுவலகத்தில் ஸ்ரீகாந்த் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அவர் ஆஜராகவில்லை. மேலும் வேறொரு நாளில் ஆஜராக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 11-ம் தேதி ED அலுவலகத்தில் ஆஜராக மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

error: Content is protected !!