News April 5, 2025
இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் மோடி அஞ்சலி

கொழும்பு அருகே உள்ள இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, அமைதிக்காக உயிர்த்தியாகம் செய்த இந்திய வீரர்களை நினைவு கூர்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார். பிரதமராக ராஜீவ் இருந்தபோது LTTE, இலங்கை ராணுவம் இடையே அமைதி ஏற்படுத்த இந்திய அமைதிப்படை சென்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 7, 2025
ரசிகர்கள் அடித்த அடி.. ரூட்டை மாற்றிய அஸ்வின்

நடப்பு IPL சீசனில் இனி CSK விளையாடும் போட்டிகள் குறித்து வீடியோ வெளியிடப்போவதில்லை என அஸ்வின் யூடியூப் சேனல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வின், ஜடேஜா இருக்கும் போது, அணியில் இன்னொரு ஸ்பின் பவுலரான நூர் அகமது தேவையில்லை என ஒரு வீடியோவில் கிரிக்கெட் ஆய்வாளர் பிரசன்னா தெரிவித்தது சர்ச்சையானது. பர்பிள் தொப்பியை வைத்துள்ள நூர் அகமதை நீக்க சொல்வதா என ரசிகர்கள் வெகுண்டெழுந்தனர்.
News April 7, 2025
Health Tips: ஊறவைத்த உலர் திராட்சையின் நன்மைகள்!

ஊறவைத்த உலர் திராட்சையை காலையில் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். செரிமான கோளாறுகள் நீங்கி மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வாக அமையும். இரும்புச் சத்து இருப்பதால் உடல் சோர்வை போக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்கவும் உதவுகிறது. எலும்பு வலிமைக்கு உதவும் போரான் என்ற கனிமம் இதில் உள்ளது. உலர் திராட்சை ஊறவைத்த நீரை பருகினால், உடலில் இருக்கும் நச்சுகள் வெளியேற்றப்படும்.
News April 7, 2025
கிரிக்கெட்டை தொலைத்துவிட்டார் தோனி

CSK அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கிரிக்கெட்டை தொலைத்துவிட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் விமர்சித்துள்ளார். டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் 26 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே எடுத்த தோனி, தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இது குறித்து பேசிய ஹெய்டன், தோனி அவரது மோசமான ஆட்டத்தை ஒப்புக்கொண்டு எங்களது வர்ணனையாளர் குழுவுடன் வந்து இணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.