News April 5, 2025

உலக வரலாற்றில் இடம் பிடித்த தஞ்சாவூர் பீரங்கி

image

தஞ்சையில் சுற்றுலா வரும் பயணிகள் பார்க்கவேண்டியவற்றில் முக்கிமானது, இந்த 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி ஆகும். வெள்ளை பிள்ளையார் கோயில் அருகில், காணப்படும் இந்த பீரங்கி உள்ள இடத்தை பீரங்கி மேடு என்றழைக்கின்றனர். ‘ராஜகோபால பீரங்கி’ என்று பிரபலமாக அறியப்படும் இப்பீரங்கி, ரகுநாத நாயக்கரின் ஆட்சிகாலத்தில், 1620ஆம் ஆண்டு வார்க்கப்பட்ட இது, உலகின் மிகப்பெரிய ஃபோர்ஜ் வெல்டிங் இரும்பு பீரங்கியில் ஒன்றாகும்.

Similar News

News August 23, 2025

ஆஞ்சனேயருக்கு 508 கிலோ துளசியால் அலங்காரம்

image

கும்பகோணத்தில் விஸ்வரூப ஜெயமாருதி கோயிலில் நேற்று (ஆக 22) ஆவணி மாத அமாவாசை நாளை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு 508 கிலோ துளசி இலைகளால் வெள்ளிக்கிழமை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இப்பூஜையில் மட்டை தேங்காயை சிவப்பு துணியில் கட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

News August 23, 2025

கும்பகோணம் மாவட்டம் அமைக்க வேண்டி விநாயகர்!

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என 28 வருடங்களுக்கு மேலாக கும்பகோணம் பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே கும்பகோணம் மாநகர அகில பாரத இந்து ஆன்மீக பேரவை சார்பில், கும்பகோணம் மாவட்டம் அமைக்க வேண்டி விநாயகர்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

News August 23, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆக.22) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!