News April 5, 2025
பணம் இரட்டிப்பு மோசடி: போலீசார் எச்சரிக்கை!

சேலம் அம்மாப்பேட்டையில் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில், பொது மக்களிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மோசடியில் ஈடுபட்டு 4 பேர் கைதான நிலையில், பணம் கட்டியவர்களுக்கு திருப்பி தருவதாக வாட்ஸப் மூலம் ஏஜெண்டுக்கள் பரப்பி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், இது குற்றவாளிகளுக்கு சாதகமாக திருப்ப செய்யும் சூழ்ச்சி எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News August 5, 2025
சேலம்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL!

சேலம் மக்களே.., வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE IT
News August 5, 2025
சேலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சேலம் மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள்:
▶️எடப்பாடி, நடராஜ திருமண மண்டபம்
▶️இளம்பிள்ளை,சந்தைப்பேட்டை, மாரியம்மன் திருக்கோயில் திருமண மண்டபம்
▶️நெய்காரப்பட்டி ஸ்ரீ கிருஷ்ண மஹால்
▶️மின்னாம்பள்ளி வைஷ்ணவி திருமண மண்டபம்
▶️முத்துநாயக்கன்பட்டி, அருள் மஹால் திருமண மண்டபம்
News August 5, 2025
சேலத்தில் அமலுக்கு வரும் தாழ்தளப் பேருந்துகள்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்டத்திற்கு 25 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து இன்னும் ஓரிரு வாரத்தில் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தாழ்தள பேருந்துகள் இயக்கப்படும் சாலையில் ஸ்பீடு பிரேக் இல்லாமல் இருக்க வேண்டும். அதுபோன்ற இடத்தை தேர்வு செய்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.