News April 5, 2025

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் பலி 

image

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் அம்முகுட்டி, இவர் இன்று காலை வீட்டுக்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது மின் கம்பி அறுந்து தொங்கியபடி கிடந்ததை கவனிக்காத அம்முக்குட்டி கம்பியில் மேல் மிதித்துள்ளார். அப்போது தூக்கி வீசப்பட்ட அம்முகுட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

Similar News

News April 8, 2025

குமரி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை வீசு கனிகாணும்நிகழ்ச்சி

image

குமரி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சி ஏப்ரல் 14 அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று அதிகாலையில் கோமாதா தரிசனமும், அதைத்தொடர்ந்து அம்மனுக்குதங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் மலையில்உள்ள கனிகள் கொண்டு வந்து மலைபோல் குவித்து வைத்து கொன்றைப்பூ அலங்காரத்துடன் கனி காணும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று பக்தர்களுக்கு கை நீட்டமும் வழங்கப்படுகிறது.

News April 8, 2025

ஆண்டு ஒன்றுக்கு 250 பேருக்கு கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி

image

நாகர்கோவிலில் உள்ள ஐஆர்டி மூலம் ஆண்டு ஒன்றுக்கு 250 பேருக்கு கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் ஐஆர்டி பயிற்சி மையம் மூலம் கரைக வாகன ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 3 பேருந்துகள் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 3 மாத காலம் அளிக்கப்படும் இந்த பயிற்சி மூலம் ஆண்டு ஒன்றுக்கு 250 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

News April 8, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர்மட்ட விபரம்

image

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று (ஏப்.8 ) 30. 31 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 26.95 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.79 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.88 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 153 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 50 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

error: Content is protected !!