News April 5, 2025
JDU-இல் இருந்து 5 தலைவர்கள் விலகல்

வக்பு வாரிய மசோதாவுக்கு ஆதரவளித்ததால் அதிருப்தியடைந்து, JDU-வில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர். JDU-ன் பீகார் மாநில பொதுச் செயலாளர் முகமது சித்திகி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷாநவாஸ் மாலிக் உள்ளிட்ட 4 பேர் ஏற்கெனவே விலகினர். இந்நிலையில், இளைஞரணி துணைத் தலைவர் தப்ரீஸ் ஹாசனும் விலகியுள்ளார். அடுத்தடுத்து தலைவர்கள் விலகுவது JDU தலைவர் நிதிஷ்குமாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 13, 2025
யாருடன் சேர்ந்தாலும் பாஜகவுக்கு தோல்விதான்: CM

அதிமுக- பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுக தலைமையை மிரட்டி பணிய வைத்து தன்னுடைய சதித் திட்டங்களை பாஜக நிறைவேற்றப் பார்க்கிறது. பாஜக தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் மக்கள் தக்கப்பாடம் புகட்டக் காத்திருக்கின்றனர்; சுயமரியாதையின்றி டெல்லிக்கு மண்டியிட்டு தமிழகத்தை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்துக்கு மக்கள் தக்க விடையளிப்பார்கள் என கூறியுள்ளார்.
News April 13, 2025
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்

பாஜக உடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காரைக்காலைச் சேர்ந்த முன்னாள் MLA கேஏயு.அசனா அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். 2021 அதிமுக படுதோல்விக்கு காரணம் BJP உடன் கூட்டணி வைத்ததுதான். அப்படி இருந்து மீண்டும் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளது சிறுபான்மை மக்களை வேதனையடையச் செய்துள்ளது. இதனால், அதிமுகவில் இருந்து விலகுவதாகவும், அடுத்தக்கட்ட முடிவு விரைவில் அறிவிப்பேன் எனவும் கூறியுள்ளார்.
News April 13, 2025
விரக்தியில் இருக்கம் ஆளுநரே திரும்ப போ.. EX மினிஸ்டர்

RSS எனும் நஞ்சை மனதில் சுமந்து நடக்கும் ஆளுநர் எப்படி அரசியல் சட்டத்தை மதிப்பார்? என்று மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்களிடம் ஒரு குறிப்பிட்ட மதத்தை திணிக்கும் நோக்கில் தனது அதிகாரத்தை தவறாகக் கையாண்டிருக்கிறார். இப்பேர்பட்ட நஞ்சை சுமக்கும் நாகரீகமற்றவர்கள் எப்படி நடுநிலையுடன் மக்களுக்கு சேவை ஆற்ற முடியும். SC தீர்ப்பால் விரக்தியில் இருக்கம் ஆளுநரே திரும்ப போ என எச்சரித்துள்ளார்.