News April 5, 2025
தூத்துக்குடி : போக்சோ வாலிபருக்கு ஐந்து ஆண்டு சிறை

ஆழ்வார் திருநகரி அருகே உள்ள செம்பூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (22). இவர் 2014 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவர் மீது தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆழ்வார் திருநகரி போலீசார் போக்சோ வழக்கு தொடர்ந்ததனர். இதில் இவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்தும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News April 12, 2025
தூத்துக்குடியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News April 12, 2025
தூத்துக்குடியில் சமையல் உதவியாளர் பணி

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 104 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. ஊதியமாக ரூ.3,000 முதல் ரூ.9000 வரை வழங்கப்படும். இதில் 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதுள்ளவர்கள் இங்கே <
News April 12, 2025
விபத்தில் காயமடைந்தவருக்கு ரூ.1.14கோடி நஷ்ட ஈடு

தூத்துக்குடியை சேர்ந்த துரைசிங் என்பவர் நான்காம் கேட் அருகே டூவிலரில் சென்ற போது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்தார். இதற்கு நஷ்ட ஈடு கோரி கார் உரிமையாளர் மற்றும் நேஷனல் இன்சூரன்ஸ் மீது துரைசிங் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மனுதாரருக்கு ரூ.1,14,06,486 நஷ்ட தொகை வழங்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.