News April 5, 2025
சதுரகிரியில் மலையேற பக்தர்களுக்கு தடை

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாதம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆண்டு முழுவதும் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி வியாழக்கிழமை முதல் அமல் படுத்தப்பட்டது. கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை.
Similar News
News November 2, 2025
விருதுநகர் அருகே கொலையா?

விருதுநகர் டி.சி.கே. பெரியசாமி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(50). திருமணம் ஆகாத இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்த நிலையில் பஜார் போலீசார் அவரது உடலை கைப்பற்றினர். இவர் அடித்து கொலை செய்யப்படார? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தார என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 2, 2025
சிவகாசி அரசு மருத்துவமனையில் குவியும் மக்கள்

சிவகாசியில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற கூட்டம் கூட்டமாக மக்கள் வருகை தருகின்றனர். அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற வருவதால் நீண்ட வரிசைகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க கோரிக்கையும் எழுந்துள்ளது.
News November 2, 2025
சிவகாசியில் இலவச கண் சிகிச்சை முகாம்

சிவகாசியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று(நவ.02) நடைபெற உள்ளது. SBJ கண் மருத்துவமனை & புதுத்தெரு 46வது வார்டு மாமன்ற உறுப்பினர் சேவுகன் இணைந்து நடத்தும் இந்த முகாம் புதுத்தெரு பேச்சிமுத்து காம்ப்ளக்ஸ் அருகில், 46வது வார்டு திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் கண் சார்ந்த பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்வதால் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


