News April 5, 2025
மோடி பயணத்தால் மீன்பிடி உரிமை கிடைக்குமா?

பிரதமர் மோடி இலங்கை சென்றுள்ள நிலையில், TN மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு வலுவாக எழுந்துள்ளது. ஆழ்கடலில் மீன்பிடி உரிமை, கச்சத்தீவு உள்ளிட்ட கோரிக்கைகள் மீண்டும் வலுத்துள்ளன. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூட மீன்பிடி உரிமையை நாம் பெற்றே ஆக வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். திமுக MP டி.ஆர்.பாலுவும் கச்சத்தீவுக்காக மக்களவையில் குரல் எழுப்பியிருந்தார்.
Similar News
News October 22, 2025
தீபாவளியில் மக்கள் அதிகம் வாங்கியது இதைதான்!

நடப்பாண்டு தீபாவளி விற்பனை ₹6.05 லட்சம் கோடியாக உள்ளது. இதில் மக்கள் அதிகம் வாங்கிய பொருள்களை தேசிய வணிகர்கள் சங்க கூட்டமைப்பு (CAIT) பட்டியலிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக மளிகை, உணவுப்பொருள்கள் 12% விற்பனையாகியுள்ளது. அதற்கு அடுத்ததாக, தங்கம் உள்பட நகைகள் 10%, எலக்ட்ரானிக்ஸ் 8%, ஆயத்த ஆடைகள் 7%, ஃபர்னிச்சர் உள்பட வீட்டு உபயோக பொருள்கள் 5%, ஜவுளி 4% விற்பனை செய்யப்பட்டுள்ளது.
News October 22, 2025
உங்க குழந்தைகள் இத சாப்பிடுறாங்களா? உஷார்!

உங்கள் குழந்தைகளுக்கு பேக் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ்களை வாங்கி தரீங்களா? இன்னைக்கே இதை நிறுத்துங்க. பேக் செய்யப்பட்ட/பதப்படுத்தப்பட்ட சிப்ஸ்களால், எடை அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், இளம் வயதிலேயே சுகர் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்த சிப்ஸ்களை தயாரிக்கும் எண்ணெயால் இதய பிரச்னைகள் கூட வருவதாக டாக்டர்கள் எச்சரிக்கிறாங்க. SHARE.
News October 22, 2025
நக்விக்கு எதிராக சாட்டையை சுழற்றும் BCCI

ஆசிய கோப்பை விவகாரத்தில் ACC தலைவரும், பாக்., அமைச்சருமான மொஹ்சின் நக்விக்கு எதிராக ICC-யிடம் BCCI முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் டிச., 4 – 7 வரை நடைபெற உள்ள ICC பொதுக்கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையை இந்திய அணி வாங்க மறுத்த நிலையில், கோப்பையை அனுப்பாமல் நேரில் வந்து வாங்க சொல்லி அவர் முரண்டு பிடித்து வருகிறார்.