News April 5, 2025

ராணி சோப்பு தெரியுமா?

image

கச்சத்தீவு தேவாலய பெருவிழாவுக்கு செல்லும் போதெல்லாம் தமிழக மக்கள் மறக்காமல் வாங்கி வருவது என்ன தெரியுமா? ராணி சோப்பு தான். அதன் சந்தன நறுமணம் மக்களை ஈர்த்து வருகிறது. இலங்கையின் சுதேசி தயாரிப்பான ராணி சோப்பு 1941 முதல் சந்தைகளில் விற்பனையாகிறது. தரம், சருமத்தை பாதிக்காத தன்மையே வர்த்தக அளவில் வெற்றியடைய காரணம். அடுத்த முறை கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல நேர்ந்தால் ராணியை மறந்துடாதீங்க!

Similar News

News August 13, 2025

இனிமேல் ₹24க்கே ஆன்லைனில் ITR தாக்கல் பண்ணலாம்

image

ஜியோ பைனான்ஸ் செயலியில் புதிய வரி திட்டமிடல் (tax planning) மற்றும் ITR தாக்கல், தற்போது புதிய அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு சரியான வரி முறையை ( பழைய – புதிய வரி) தேர்வு செய்யவும், குழப்பங்களை குறைக்கவும், மலிவு விலையில் தாங்களாகவோ அல்லது நிபுணர் உதவியுடனோ வருமான வரிக் கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்யவும் உதவுகிறது. இந்த திட்டம் வெறும் ₹24 முதல் ஆரம்பமாகிறது.

News August 13, 2025

திமுகவில் இணைந்தது ஏன்? மைத்ரேயன் விளக்கம்

image

அமைப்பு செயலாளராக இருந்த தன்னை அதிமுக சரியாக பயன்படுத்தவில்லை என திமுகவில் இணைந்த மைத்ரேயன் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியில் பெரும் குழப்பம் உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். EPS பிரச்சாரத்துக்கு வரும் கூட்டம் அழைத்து வரப்படும் கூட்டம் மட்டுமே என்றும் அவர் மக்கள் தலைவர் இல்லை எனவும் கூறியுள்ளார்.

News August 13, 2025

‘கூலி’ படத்துக்கு போலி டிக்கெட்கள் ! ரசிகர்கள் அதிர்ச்சி

image

நாளை வெளியாக உள்ள ‘கூலி’ படத்துக்கான டிக்கெட்கள் மளமளவென விற்றுத்தீர்ந்துள்ளன. நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான் உள்ளிட்டோரும் படத்தில் உள்ளதால் தமிழகம் தாண்டி மற்ற மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதை பயன்படுத்தி டிக்கெட்டை ₹500 முதல் ₹3,000 வரை விற்கின்றனர். இதுபோதாது என போலி டிக்கெட்களும் கூலி படத்துக்கு விற்பனையாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. Careful மக்களே!

error: Content is protected !!