News April 5, 2025

ராணி சோப்பு தெரியுமா?

image

கச்சத்தீவு தேவாலய பெருவிழாவுக்கு செல்லும் போதெல்லாம் தமிழக மக்கள் மறக்காமல் வாங்கி வருவது என்ன தெரியுமா? ராணி சோப்பு தான். அதன் சந்தன நறுமணம் மக்களை ஈர்த்து வருகிறது. இலங்கையின் சுதேசி தயாரிப்பான ராணி சோப்பு 1941 முதல் சந்தைகளில் விற்பனையாகிறது. தரம், சருமத்தை பாதிக்காத தன்மையே வர்த்தக அளவில் வெற்றியடைய காரணம். அடுத்த முறை கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல நேர்ந்தால் ராணியை மறந்துடாதீங்க!

Similar News

News October 18, 2025

BREAKING: கடும் சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 7 காசுகள் சரிந்து ₹88.03 ஆக உள்ளது. இதனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள், ரூபாய் சரிவின் காரணமாக இழப்பை சந்திக்க நேரிடும். மேலும் அவர்களின் வெளிநாட்டு பயணங்கள், கல்விச் செலவுகள் அதிகரிக்கும். அத்துடன் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருள்களிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

News October 18, 2025

தீபம் காட்டும் போது கற்பூரம் அணைந்தால் அபசகுணமா?

image

கற்பூர ஆரத்தி செய்த பிறகுதான், பூஜை பூர்த்தியானதாக கருதப்படுகிறது. கற்பூரம் எரியும்போது காற்றில் மறைந்துவிடுவதை போல, நமது ஆன்மாவும் இறைவனுடைய அருட்ஜோதியில் கரைந்து ஒன்றுபட வேண்டும் என்ற தத்துவத்தை கற்பூரம் விளக்குகிறது. தீபாராதனையின் போது தீபம் அணைந்துவிட்டால் அபசகுணம் என்று எண்ண வேண்டாம். அதே கற்பூரத்தை மீண்டும் ஏற்றாமல், உடனே வேறு கற்பூர துண்டுகளை வைத்து எரித்து தீபாராதனை காட்டுங்கள்.

News October 18, 2025

விஜய் போட்டியிடும் தொகுதி.. தகவல் வெளியானது

image

‘V’ என்ற எழுத்தில் துவங்கும் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என விஜய்யின் குடும்ப ஜோதிடர் கணித்துள்ளாராம். இதனால், அந்த எழுத்தில் தொடங்கும் 9 தொகுதிகளில் ரகசிய சர்வே எடுக்கப்பட்டு வருவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘V’ என்ற எழுத்தில் வில்லிவாக்கம், விருகம்பாக்கம், விக்கிரவாண்டி, விருத்தாசலம், வீரபாண்டி, விராலிமலை, விருதுநகர், விளாத்திகுளம், விளவங்கோடு தொகுதிகள் உள்ளன.

error: Content is protected !!