News April 5, 2025

ஆடிட்டரிடம் ரூ.1 கோடி பறித்த இன்ஸ்பெக்டர் கைது

image

தஞ்சையைச் சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன் என்பவர் அவருக்கு சொந்தமான 80 சென்ட் இடத்தில் அவர் வளர்த்த 30 தேக்கு மரங்களை அனுமதியின்றி வெட்டியதாக பதியப்பட்ட வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதாகக் கூறி, தர்மபுரியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் அரியலூரைச் சேர்ந்த நெப்போலியன் என்பவர் ரூ.1 கோடி பணத்தை ஏமாற்றி பெற்றதாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Similar News

News August 23, 2025

அரியலூர்: இலவச சட்ட உதவி மையம் திறப்பு

image

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, அரியலூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் இலவச சட்ட உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இது புதன்கிழமை தோறும் செயல்படும். இதனை முன்னாள் படை வீரர்கள் பயன்படுத்தி தங்களின் பிரச்சினைகளுக்கு இலவச சட்ட உதவியை பெறலாம். மேலும், 24 மணி நேரமும் சட்ட உதவி பெற இலவச எண் 15100 என்பதை அழைக்கலாம் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மலர்வாலண்டினா அறிவுறுத்தியுள்ளார். SHARE IT..

News August 23, 2025

ஜெயங்கொண்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

image

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம் விளந்தை ஊராட்சியில், நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு மருத்துவ முகாம் (23.8.2025) சனிக்கிழமை அன்று அரசு மேல்நிலைப்பள்ளி, விளந்தையில் நடைபெற உள்ளது. ஆகவே அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அந்த முகாம்களில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டது.

News August 23, 2025

அரியலூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், தினந்தோறும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், (ஆக.,22) அரியலூர் பகுதியில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர் பெயர் விவரம் மற்றும் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு இவர்களை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!