News April 5, 2025

கோவில் அருகே சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு

image

சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதியில் நேற்று (ஏப்ரல்-04) போலீசார் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து சோதனை நடத்தினர். அப்போது தவ முனிஸ்வரர் கோயில் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட தங்கேஸ்வரன் (29), தங்கப்பாண்டி (30) ஆகிய இருவரை சிவகாசி கிழக்கு போலீசார் கைது செய்து அங்கிருந்த சுமார் 10,000 ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 26, 2025

விருதுநகர் பெண்களே ரூ.1000 வரலையா ? – CLICK HERE…!

image

விருதுநகர் மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.
1.இங்கு <>கிளிக் <<>>செய்து கணக்கு உருவாக்குங்க.
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.
இந்த தகவலை தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News December 26, 2025

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து

image

விருதுநகர் அருகே முதலிப்பட்டியில் பேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி, சங்கரேஸ்வரி ஆகியோர் நேற்று மதியம் உணவு இடைவெளிக்கு பின் பேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது உராய்வு ஏற்பட்டு நடந்த வெடி விபத்தில் இரு பெண்களும் காயமடைந்து விருதுநகரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 26, 2025

விருதுநகர்: 5 பேர் மீது பாய்ந்த போக்சோ

image

ஏழாயிரம்பண்ணை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மாரிச்சாமிக்கு 16 வயது சிறுமியை இவரது தாய் பொன்னுத்தாய், சகோதரர் அசோக் , அண்ணி கௌசி, மாமியார் மாரித்தாய் ஆகியோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்து புகார் வந்தததையடுத்து வெம்பக்கோட்டை ஊர் நல அலுவலர் மகாலட்சுமி விசாரித்தத்தில் உண்மை என தெரிந்தது. இதையடுத்து சிறுமியின் கணவர் உட்பட 5 பேர் மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!