News April 5, 2025
கோவில் அருகே சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு

சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதியில் நேற்று (ஏப்ரல்-04) போலீசார் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து சோதனை நடத்தினர். அப்போது தவ முனிஸ்வரர் கோயில் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட தங்கேஸ்வரன் (29), தங்கப்பாண்டி (30) ஆகிய இருவரை சிவகாசி கிழக்கு போலீசார் கைது செய்து அங்கிருந்த சுமார் 10,000 ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News February 24, 2026
JUST IN விருதுநகரில் 98 வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1901 ஆக இருந்த வாக்குச்சாவடிகள் தற்போது 98 வாக்குச்சாவடிகள் அதிகரித்து மொத்தம் 1999 வாக்குச்சாவடிகளாக உயர்ந்துள்ளது. அதில் 88 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்கனவே உள்ள அமைவிடத்திலும், 10 வாக்குச்சாவடிகள் புதிய அமைவிடங்களிலும் உள்ளன.
News February 24, 2026
விருதுநகர்: கேஸ் மானியம் ரூ.300 வங்கி கணக்கில் பெறுவது எப்படி…?

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 24, 2026
சிவகாசி: பட்டாசு தொழிலாளியிடம் ரூ. 3¾ லட்சம் மோசடி

சிவகாசி கொங்கலாபுரத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் திருவேங்கடத்தை சேர்ந்த பட்டாசு தொழிலாளியான காளீஸ்வரியின் (50) மகளுக்கு அரசு மருத்துவமனையில் நர்சிங் வேலை, மருமகனுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேலை வாங்கித்தருவதாக ரூ.2.90 லட்சம், காளீஸ்வரியின் உறவினர் சின்னத்துரையிடம் ரூ.98,000 பெற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகாரில் தர்மராஜ், பத்மப்ரியா மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


