News April 5, 2025
மகளுக்கு பாலியல் தொந்தரவு தந்தைக்கு வாழ்நாள் சிறை

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது கட்டட தொழிலாளி 2020 ல் 8 வயது மகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். 2020 ல் போலீஸ் ஸ்டேஷனில் தந்தைக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. தற்போது இவ்வழக்கில் தொழிலாளிக்கு வாழ்நாள் சிறையும், ரூ.4,100 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News August 19, 2025
சிவகங்கை: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.
News August 19, 2025
மன்னர் துரை சிங்கம் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

சிவகங்கை மன்னர் துரை சிங்கம் கல்லூரியில் ஆக.20ஆம் தேதி காலை 10 மணிக்கு மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழ் மரபும் பண்பாடும் பரப்புரையாக “சிம்புட் பறவையே… சிறகை விரி!” என்ற தலைப்பில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை வழங்க உள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
News August 19, 2025
உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற உள்ள இடங்கள்

சிவகங்கை மாவட்டம், “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் ஆகஸ்ட்-20, நாளை நடைபெறவுள்ள இடங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்காங்கே அறிவிக்கப்பட்ட முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு, நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளிடம் தங்கள் மனுக்களை கொடுத்து பதிவு செய்யுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.